News Ticker

Menu

Text Widget

Name

Email *

Message *

Page

Powered by Blogger.

Science[dark](3)

Breaking News[slider]

இலங்கைச் செய்திகள்[two]

Sticky News[hot](3)

Business[three](3)

இந்தியச் செய்திகள்[oneleft]

சினிமா செய்திகள்[oneright]

Tabs

Flexible Home Layout

Sub menu section

Main menu section

இலங்கை தமிழரின் காணாமல் போன மகன் சென்னையில் பொலிஸாரால் மீட்பு

 இலங்கை தமிழரின் காணாமல் போன மகன் சென்னையில் பொலிஸாரால் மீட்பு

   
இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சென்னை வாழ் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த தனது 12 வயது மகனை அவனது தந்தையார் பொலிசாரின் உதவியுடன் மீட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 44). என்ற ஈழத் தமிழரான இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். மனைவி இறந்து விட்டார்.

இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக குறித்த சிவபாலன், சென்னை வாழ் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் தனது மகன் ஒருவனை ஒப்படைத்திருந்தார்.

இதன்போது குறித்த சிறுவன் காணாமல் போய்விட்டதாக சென்னை வாழ் இலங்கைத் தமிழர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,சிவபாலன்,  தனது 12 வயது மகனை மீட்டுத் தரும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 23ஆம் திகதி புகார் அளித்தார்.

இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க பொலிசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி, நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. பொலிசார் இலங்கை தமிழர் அதிகமாக வாழும் பல்வேறு பகுதிகளில் பவித்திரன் எனும் குறித்த சிறுவனைத் தேடினர்.

இறுதியில், முகப்பேரில் ஜெயலட்சுமி என்பவர் இருப்பதைக் கண்டு பிடித்தனர். அவர் பொலிசாரிடம் ஒரு முகவரி கொடுத்து விட்டு மற்றொரு முகவரியில் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் பவித்திரன் தனது மகன் என்று கூறி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்த்துள்ளார். தற்போது, அவன் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து பொலிஸார் பவித்திரனை மீட்டு சிவபாலனிடம் ஒப்படைத்தனர். 45 நாள் தேடுதலுக்கு பிறகு மகனை மீட்டுக் கொடுத்த பொலிசாருக்கு சிவபாலன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Share This:

Post Tags:

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " இலங்கை தமிழரின் காணாமல் போன மகன் சென்னையில் பொலிஸாரால் மீட்பு "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM