பேஸ்புக்கினால் மகாராஷ்டிராவில் மீண்டும் வன்முறை
பேஸ்புக்கினால் மகாராஷ்டிராவில் மீண்டும் வன்முறைஅம்பேத்கர் குறித்த ஆட்சேபணைக்குரிய படங்களை சிலர் ஃபேஸ்புக்கில் பரப்பியதால் மகாரஷ்டிராவில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த வாரம் மராட்டிய மன்னர் சிவாஜி மற்றும் சிவ சேனைத் தலைவர் பால் தாக்கரே ஆகியோரை இழிவுப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக்கில் சில படங்கள் கசியவிடப்பட்டன.
இதனையடுத்து அங்கு இந்து ராஷ்ட்ர சேனை அமைப்பினர் மேற்கொண்ட வன்முறைச் சம்பவத்தில் மொசின் ஷேக் என்ற தொழில்நுட்ப வல்லுநர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், நேற்று மீண்டும் ஃபேஸ்புக்கில, அம்பேத்கர் குறித்து அவதூறு ஏற்படுதும் விதமாக சில படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து புனே, சோலாப்பூர், அவுரங்காபாத் ஆகிய இடங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த வன்முறையால் பல அரசு பேருந்துகள் பலத்த சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், ஃபேஸ்புக்கில் அவதுறாக பதிவேற்றம் செய்யப்பட்ட கணணியின் ஐ.பி எண் குறித்த தகவலை தரும்படி, மகாராஷ்டிரா காவல்துறை ஆணையம் ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடர்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மகாராஷ்டிராவில் தொடர்ந்து நடைபெறும் வகுப்புவாத வன்முறை குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு மாநில அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

























No Comment to " பேஸ்புக்கினால் மகாராஷ்டிராவில் மீண்டும் வன்முறை "