இந்திய மீனவர்கள் 32 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 32 தமிழக மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.8 படகுகளுடன் தமிழக மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணக்குலசூரிய தெரிவித்தார்.
அவர்கள் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் 41 இந்திய மீனவர்கள் 8 படகுகளுடன் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு தொடக்கம் இதுவரை 73 இந்திய மீனவர்களும் , அவர்களின் 16 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணக்குலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.


























No Comment to " இந்திய மீனவர்கள் 32 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது "