News Ticker

Menu
Sri lanka news

Latest Post

Sri lanka news

Entertainment

Sri lanka news

Business

Technology

Lifestyle

Sports

Text Widget

Name

Email *

Message *

Page

Powered by Blogger.

Science[dark](3)

Breaking News[slider]

இலங்கைச் செய்திகள்[two]

Sticky News[hot](3)

Business[three](3)

இந்தியச் செய்திகள்[oneleft]

சினிமா செய்திகள்[oneright]

Tabs

Flexible Home Layout

Sub menu section

Main menu section

Recent Posts

கனடா ஒன்ராறியோ தேர்தலில் மீண்டும் லிபரல் கட்சி அதிக ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ளது!

Friday, June 13, 2014 / No Comments
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலில் அங்குள்ள இரு பிரதான கட்சிகளின் சார்பில் மூன்று தொகுதிகளில் மூன்று ஈழத் தமிழ் வம்சாவளியினர் போட்டியிட்ட போதிலும் அவர்களில் எவருக்கும் வெற்றி வாய்ப்புக் கிட்டவில்லை.

பிரதான கட்சிகளில் ஒன்றான ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் ஸ்காபுறோ - றோக் றிவர் தொகுதியில் நீதன் சண் போட்டியிட்டார்.

ஒன்ரோறியோ முன்னேற்ற கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் ஸ்காபுறோ - கில்ட்வூட் தொகுதியில் கென் கிருபா, மார்க்கம் - யூனியன்வில்லி தொகுதியில் சண் தயாபரன் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.
 

இந்த தேர்தலில், மீண்டும் லிபரல் கட்சி அதிக ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ளது.
ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள 107 தொகுதிகளில் 58 தொகுதிகளை லிபரல்கட்சியும், 28 தொகுதிகளை முன்னேற்றகர கன்சவேட்டிவ் கட்சியும், 21 தொகுதிகளை புதிய ஜனநாயகக் கட்சியும் தக்க வைத்துள்ளன.இதன் பிரகாரம் அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 54 ஆசனங்களை விட மேலதிகமாக 4 ஆசனங்களைப் பெற்று லிபரல் கட்சி ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது.

அநேகமான தருணங்களில் கருத்துக் கணிப்பின் பிரகாரமே ஆட்சியமையும் என்பதும் இம்முறைய கருத்துக் கணிப்பினைப் புறந்தள்ளி லிபரல் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மசகு எண்ணைக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பினால் நானொன்றுக்கு 30 இலட்சம் ரூபா நட்டம்

Thursday, June 12, 2014 / No Comments



நாட்டிற்குள் மசகு எண்ணையை கொண்டு வருவதற்காக கடலில் காணப்படும் குழாயொன்றில் ஏற்பட்டுள்ள வெடிப்புக் காரணமாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளொன்றுக்கு 30 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.



மறுசீரமைப்பு பணிகள் உரிய தரத்தில் முன்னெடுக்கப்படாமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



அத்துடன் கடந்த மூன்று வாரக் காலமாக இந்நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



பெற்றோலிய பொது ஊழியர் சங்கம் தலைவர் அசோக ரங்வல இவ்விடயம் குறித்து குறிப்பிடுகையில்,

புதிய குழாயில் ஏற்பட்டுள்ள ஒழுக்கினால் உரிய வகையில் மசகு எண்ணெயை பெற்றுக்கொள்ள முடியாமையால் ஒரு நாளைக்கு 25ஆயிரம் தொடக்கம் 30ஆயிரம் டொலர்கள் வரையில் நட்டம் ஏற்படுகின்றது.



இதன் இலங்கை பெறுமதி 30இலட்சம் ரூபாவாகும். 10 வருடங்கள் பயன்டுத்தக் கூடிய வகையிலேயே இந்த குழாய்கள் காணப்படும். ஆனால் ஓரிரு மாதங்களில் இந்த குழாய்கள் உடைந்து விடுவதால் பாரியளவில் நட்டம் ஏற்படுகின்றது என்றார்.



மேலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவிக்கையில்,

குழாயினை பொறுத்திய பின்னர் ஓரிரு மாதங்களில் அவை உடைந்து விடுகின்றன. இதற்கான காரணத்தை இன்னும் நாங்கள் அறிய வில்லை. ஏனெனில் இது குறித்து ஆராய வேண்டும். இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்கள் கடந்துள்ளன. ஆனால், எம்மால் கடலுக்கு செல்ல முடியாமலுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகின்றது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த நிலைமை சீராகிவிடும்.



புதிய குழுாய் ஒன்றை அமைப்பதற்கான, ஆய்வுப்பணிகளுக்காக மலேஷிய நிறுவனம் ஒன்றுக்கு 3இலட்சத்து 64ஆயிரம் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோலிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.



பெற்றோலிய பொது ஊழியர் சங்கம் தலைவர் அஷோக ரங்வெல தெரிவித்த தெரிவிக்கையில்,

பத்தாண்டு காலத்திற்காக குழாய் ஒன்றை மாற்றியமைப்பதே தேவைப்படுகின்றது. இதனை செய்யாது, வேறு வேலைகளை செய்கின்றனர். இதன் காரணமாக வீண் விரயங்கள் அதிகரித்துள்ளன.
நட்டத்தில் இயங்கும் நிறுவனம் என்ற வகையில்,இவ்வாறான வீண் விரயங்களை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறைப்பதனால் நீண்ட நாட்களுக்கு இயங்க முடியும்.



இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவிக்கையில்,

காணப்படும் குறைபாடுகளை அவர்கள் எமக்கு அறிவித்துள்ளனர். இவற்றை நாம் திருத்த வேண்டியுள்ளது.
அவ்வாறு இல்லையென்றால், தொடர்ந்தும் பழுதடைந்தே இருக்கும். இந்த குழாய் 27 வருடங்கள் பழமை வாய்ந்தவை. பொதுவாக இவ்வாறான குழாயின் ஆயுட்காலம் 25 ஆண்டுகளாகும். இதனை மாற்ற வேண்டும் அல்லது திருத்த வேண்டும் என்ற யோசனையை யாரும் முன்வைக்கவில்லை. இவ்வாறான குழாயை தயாரிக்கும் ஓரிரு நிறுவனங்கள் மாத்திரமே உலகில் உள்ளன. அவர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம் என்றார்.

கீரிமலை கவுணாவத்தை ஆலயத்தில் மிருக பலிக்கு எதிராக அறவழி போராட்டக் குழு இன்று உண்ணா விரதம்

/ No Comments
கீரிமலை கவுணாவத்தை ஆலயத்தில் மிருக பலியிடலுக்கு எதிராக அறவழி போராட்டக் குழுஇன்று வெள்ளிக்கிழமை தெல்லிப்பளை, துர்க்கையம்மன் ஆலயத்திற்கு முன்பாக உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இப்போராட்டம் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையில் இடம்பெறவுள்ளது.

அறவழிப் போராட்டக்குழு நிறுவுநர் மறவன் புலவு க. சச்சிதானந்தன் இந்த உண்ணா நோன்புக்குத் தலைமை தாங்குகிறார்.

திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் மூவர் உண்ணாவிரதம் (படங்கள் இணைப்பு)

/ No Comments

திருச்சி சிறப்பு முகாமில் மூன்று ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



தேவரூபன் (வயது 27), கேதீஸ்வரன் ( வயது 33), புருசோத்தமன் ( வயது 29) ஆகிய மூவருமே இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களாவர்.



தேவரூபன் என்பவர், சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரதம் இருககின்ற நிலையில் புருசோத்தமன் ,கேதீஸ்வரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்து தங்களது குடும்பங்களுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து உண்ணாநிலை போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.



இவர்கள் மூவரும் கடல்வழியாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதாகி கடந்த ஒரு வருடமாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.



இவர்களின் குடும்பத்தினர் திறந்தவெளி முகாம்களில் வசிக்கின்றார்கள். தினக்கூலி வேலைகளுக்கு சென்றே இவர்கள் தங்களது குடும்பங்களை பார்த்து வந்தார்கள். தற்போது இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளது.



தொடர்ந்தும் தங்களின் குடும்பங்கள் இவ்வாறு வாழ வழியின்றி இருப்பதனாலேயே விடுதலையை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டத்தினை நடத்துவதாக உண்ணாவிரதம் இருப்பவர்கள் தெரிவித்துள்ளார்கள்.



இதில் புருசோத்தமன் என்பவர் நான்கு வயதில் தமிழகத்துக்கு அகதியாக வந்தவர். இங்கேயே கல்வி கற்று தமிழக பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தவர். இவருக்கு சிறிய வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.



கேதீஸ் என்பவர் கடந்த எட்டு வருடங்களாக திறந்தவெளி முகாமில் வாழ்ந்து வந்தவர். இரண்டு சிறிய வயது குழந்தைகளுடன் குடும்பத்தினர் மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.



தேவரூபன் என்பவர் கடந்த ஏழு வருடங்களாக திறந்தவெளி முகாமில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தவர். சிறிய வயது குழந்தை ஒன்றுடன் குடும்பத்தினர் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் இந்த உண்ணாநிலை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் படி தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் வேண்டி நிற்பதாகவும் இவாகள் தெரிவித்துள்ளனர்.


காருக்குள் இரு பெண்களுடன் உல்லாசம்: உயிருக்கு போராடும் இளைஞர் (காணொளி)

/ No Comments

சீனாவில் உள்ள ஒரு இளைஞர் மலைப்பாதை ஒன்றில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இரண்டு பெண்களுடன் காரில் உல்லாசமாக இருந்தபோது, கார் திடீரென பாதையை விட்டு விலகி மலையில் இருந்து உருண்டதால், காரில் இருந்து மூன்று நபர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள வென்ஜோ என்ற பகுதியைச் சேர்ந்த சுங் ஹே என்பவர் தனது இரண்டு பெண் தோழிகளான யீசூ(27), மற்றும் டாய் லெய்(23) ஆகியோருடன் உல்லாசமாக இருப்பதற்காக அவர்களை காரில் ஏற்றி மலைப்பாதை ஒன்றுக்கு அழைத்து சென்றார்.
திருவெண்காடு இணையத்தை லைக் பண்ணிட்டுப் போங்கள்...

காரை ஓரமாக ஒரு மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு, இருவருடனும் உல்லாசமாக இருந்தார். அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக அவருடன் வந்த தோழிகளின் ஒருவரின் கால், காரின் ஹேண்ட் பிரேக்கில் பட்டதால், கார் திடீரென பாதையை விட்டு விலகி, மலைப்பாதையில் உருண்டு, ஒரு மரத்தின் மீது மோதி நின்றது. இந்த சம்பவத்தால் காரினுள் இருந்த மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக மீட்புப் படையினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மீட்பு படையினர் உடனடியாக விரைந்து வந்து, காரின் கதவை உடைத்து மூவரையும் படுகாயத்துடன் வெளியே கொண்டுவந்தனர்.

இதன்போது தான் மூவரும் காரினுள் நிர்வாணமாக இருந்துள்ளார்கள் என தெரியவந்தது. தற்போது சீன மருத்துவமனையில் மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் சுங் ஹே கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்தால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி 3 பிள்ளைகளின் தந்தை பலி

/ No Comments


அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட விநாயகபுரம் மரணகண்டி ஆற்றில் முழ்கி 3 பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

விநாயகபுரம் 3,  கப்பூகணார் வீதியைச் சேர்ந்த சபாரெத்தினம் வில்சன்சேகர் (வயது 50) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

மேற்படி நபர் விடுமுறை தினமான வியாழக்கிழமை(13) பொழுதுபோக்கிற்காக தூண்டில் மூலம் மீன் பிடிப்பதற்கு ஆற்றிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், இரவு 7 மணியாகியும் வீடு திரும்பாதிருந்ததால் உறவினர்கள் இவரை தேடிச் சென்றபோது இவர் நீரிழ் முழ்கி மரணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து திருக்கோவில் பொலிஸாருக்கு  அறிவிக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது.  பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபாகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கிளிநொச்சியில் முதியவரின் சடலம் மீட்பு!

/ No Comments


கிளிநொச்சி செல்வாநகர் யூதா கோயில் வீதிக்கு அருகில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது.

 சடலம் செல்வாநகரைச் சேர்ந்த வைத்திலிங்கம் விக்னேஷ்வரன் (வயது - 65) என்பவருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சிப் பொலிஸார் சடலத்தை மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.